Search This Blog

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Thursday, May 20, 2010

பாசம்

அன்று நான் என் காதலியின் பெயரை பச்சை குத்திய தடயத்தை தடவிப்பார்த்து ,
இன்று என் மகள் கேட்க்கிறாள்...
?
?
?
" என் மீது அவ்வளவு பாசமா அப்பா...?"

ஈரம்

கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வருகிறாள்......ஆனாலும்
...
...
...
ஈரம் இல்லை அவள் மனதில்..


Monday, May 17, 2010

தாங்க மாட்டாய்

தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!

வைரமுத்துவின் கவிதை

காதலித்துப் பார்
உன்னைச் சுற்றிஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்விளங்கும்....
உனக்கும்கவிதை வரும்......
கையெழுத்துஅழகாகும்.....
தபால்காரன்தெய்வமாவான்...
உன் பிம்பம் விழுந்தேகண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

***தலையணை நனைப்பாய்மூன்று முறைபல்துலக்குவாய்...
காத்திருந்தால்நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னைகவனிக்காதுஆனால்...
இந்த உலகமேஉன்னை கவனிப்பதாய்உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்உருவமில்லா
உருண்டையொன்றுஉருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்திஇந்த பூமி
இந்த பூக்கள்எல்லாம்காதலை
கவுரவிக்கும்ஏற்பாடுகள்என்பாய்காதலித்துப் பார்!

***இருதயம் அடிக்கடிஇடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்உனது குரல் மட்டும்ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றிஉனக்குள்ளேஅம்புவிடும்...
காதலின்திரைச்சீலையைக்காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்நைல் நதியாய்ப்பெருக்கெடுக்கும்உதடுகள் மட்டும்சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகுகண்ணீர்த் துளிக்குள்சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

***சின்ன சின்ன பரிசுகளில்சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்புலன்களை வருத்திப்புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்பெண் என்ற சொல்லுக்கும்அகராதியில் ஏறாதஅர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டேசாகவும்
முடியுமேசெத்துக் கொண்டேவாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...காதலித்துப் பார்!

காதலாலொரு....

உன் புன்னகையில்
உதிரும் மலர்கள் மட்டும்
வாடுவதேயில்லே எப்போதும்

நீ பேச வாய் திறக்கும்போதெல்லாம்
பேச்சற்றுப் போகிறேன்
உன் கண்கள்
பேசும்போது மட்டும்
காணாமல் போய் விடுவதில்
கொள்ளை மகிழ்ச்சி எனக்கு

உரிமையோடு நீ என்னை
கோபிக்கும்போது
பொங்கித் தெறிக்கும் உன் வார்த்தைகளில்
பொங்கி வழிகிறது என் மனது
நிறைகுடமாய்

களைத்த மனதிற்கு இதமான
மென்தொடுகைகளால்
உயிர்ப்பூட்டுகிறாய் நீ

உன் கரங்கள்
தொடும்போது
கழுவப்படுகின்றன என் கறைகள்

உன் அரவணைப்பில்
அன்னையின்
அன்பைக் காண்கிறேன
சேயாய் மடிசாயும் என்
தலைமுடியைக் கோதும்
உன் விரல்களில்
தாய்மையின் கரிசனம் காட்டி
புதிதாய் பிறந்ததாய்
புலப்படச் செய்கிறாய்

என்னவென்று சொல்ல முடியாத
பரவசத்தில் படர வைக்கிறாய்
தளும்பிக் கிடக்கும் என் மனதை

இளைப்பாறக் கிடைத்த
தோள்களின்
மென்மையான வலிமையில்
மறக்கிறேன் என் சுமைகளை

அறியாமல் போன நாட்களின்
அந்திப் பொழுதுகளை
புரியாதிருந்த நாட்களின்
வெறும் கணங்களை
எண்ணிச் சிரிக்கிறேன்

வாழ்க்கையில் வசந்தம்
உன் பேரோடுதான்
வருகிறதென்பதை இப்போதுதான்
உணர்கிறேன்

அன்றாட வாழ்க்கையின்
அவஸ்தைகளுக்குள்ளும்
மூச்சிறுக்கம் இல்லாமல்
முழுமையாய் சுவாசிக்கிறேன்
எப்போதும்
நீ என்னோடு இருப்பதால்

********