Search This Blog

Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Thursday, May 20, 2010

பாசம்

அன்று நான் என் காதலியின் பெயரை பச்சை குத்திய தடயத்தை தடவிப்பார்த்து ,
இன்று என் மகள் கேட்க்கிறாள்...
?
?
?
" என் மீது அவ்வளவு பாசமா அப்பா...?"

Tuesday, May 18, 2010

மறந்துபோ மனமே

தோல்வி எனக்கு புதிதல்ல,
அதனால்தான் என்னவளை மறக்கவேண்டும் என நினைக்கும்போது கூட,
என் மனதோடு போராடி தோற்றுப்போகிறேன்...

Monday, May 17, 2010

தாங்க மாட்டாய்

தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!